மயிலாடுதுறை: ஆண்டுதோறும் ஆடி 18ஆம் தேதி அன்று நடை பெறும் தமிழர்களின் முக்கிய விழாவான ஆடிப்பெருக்கு நேற்று கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் நேற்று கடைப்பிடிக்கப்பட்ட முழு பொது முடக்கத்தையும் மீறி மயிலாடு துறையில் காவிரி துலாக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடி இவ்விழாவைக் கொண் டாடினர்.
ஆடிப் பெருக்கன்று பெரும்பாலானோர் கோவிலுக்கும் நீர்நிலைகளுக்கும் சென்று வழிபாடுகள் நடத்துவர். ஆனால், நேற்று முழு ஊரடங்கின் காரணமாக கோவில்கள் திறக்கப்படவில்லை. பொதுமக்களும் தங்களது வீடு களிலேயே வழிபாடுகளை நடத்தி னர். காவிரி கரையோரப் பகுதி களும் பொதுமக்களின் வழிபாடுகள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.
பொதுமுடக்கத்தையும் மீறி, மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத் தில் ஏராளமான மக்கள் திரண்டு காவிரி அம்மனுக்கு வழிபாடு நடத்தி, ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடினர். படம்: ஊடகம்