சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 10,000க்கும் அதிகமான உடற்பயிற்சிக் கூடங்கள் நேற்று ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன.
ஐந்து மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ள இந்த உடற் பயிற்சிக்கூடங்களை மாலை 7 மணிக்குள் மூடவேண்டும் எனவும் தமிழக அரசு நேரக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
தமிழகத்தில் கிருமிப் பரவலை முறியடிக்கும் வகையில், கடந்த மாா்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் நடப்பில் இருந்து வருகிறது.
இந்நிலையில், ஊரடங்கு கட்டுப் பாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக தளர்த்தப்பட்டு வருவதை அடுத்து, அடுத்தகட்டமாக இப்போது செயல் பாட்டுக்கு வந்துள்ள உடற்பயிற்சிக் கூடங்களை நாடி மக்கள் வரத் தொடங்கி உள்ளனர்.
இந்த உடற்பயிற்சிக் கூடத்தில் 15 முதல் 50 வயதுள்ளோருக்கு மட்டுமே பயிற்சி அளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பயிற்சி பெறுவோர் கிருமிநாசினியால் கைகளைச் சுத்தம் செய்யவும் முகக்கவசம் அணியவும் ஒரு மணி நேரத்துக்கு ஒருவர் மட்டுமே ஒவ்வொரு கருவியிலும் பயிற்சி மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு உடற் பயிற்சிக் கூட உரிமையாளா் சங்கச் செயலாளா் ஏ.பகத் ஜஹாங்கீா் கூறுகையில், “ஒரு சில கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றும் வகையில், உடற்பயிற்சிக் கூடங்களை நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது எங்க ளுக்கு பெரும் நிம்மதி தந்துள்ளது.
“உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்கப்பட்டதால் எங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
“கூடங்களை காலை 6 மணிக்கே திறப்பதால் வாடிக்கையாளா்கள் பலரும் வருவதற்கு வாய்ப்புள்ளது. வீட்டில் இருந்து பணிபுரிவோரும் இரவு நேர பணியில் ஈடுபடுவோரும் இந்த உடற்பயிற்சிக் கூடங்களை அதிகம் நாடி வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது,” என்று கூறினார்.
இதற்கிடையே, ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளும் நேற்றுமுதல் செயல்படத் தொடங்கின.
தமிழகம் எங்கும் 5 மாதங்களுக்குப் பிறகு உடற் பயிற்சிக் கூடங்கள் நேற்று திறக்கப்பட்டன.
உடற்பயிற்சி சந்தாதாரர்கள், இளையர்கள் உள்ளிட்ட பலரும் உடற்பயிற்சிக் கூடத்திற்கு வந்தனர். இரவு 7 மணிக்குள் உடற்பயிற்சிக் கூடத்தை மூடும்படி நேரக் கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது.
படம்: ஊடகம்
சென்னை: தமிழக அரசின் அனுமதியைத் தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டுத் தலங்களும் நேற்று முதல் திறக் கப்பட்டு, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் வரும் 31ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, அவ்வப்போது சில தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்து வருகிறது.
கடந்த மாதம் ஊராட்சி, கிராமப் பகுதிகளில் ஆண்டு வருமானம் ரூ.10,000க்கு குறைவான வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இம்மாதம் மாநகராட்சி, நகரப் பகுதிகளில் ரூ.10,000க்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்தது.
சிறிய மசூதிகள், சிறிய தர்காக்கள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டுத் தலங் களிலும் பொதுமக்கள் தரிசனம் செய்தனர். எனினும், பெரிய அளவிலான வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதற்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.