பெரம்பூர்: பெரம்பூர் மாவட்டத்தில் உள்ள கொட்டரை அணையின் நீரில் மூழ்கிக்கொண்டிருந்த இரு இளைஞர்களை மூன்று பெண்கள் தங்களின் சேலையை வீசி காப்பாற்றி உள்ளனர்.
ஆகஸ்ட் 6ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் இப்போது சமூக வலைத்தளங்கள் வழி வெளிச்சத்துக்கு வர, பலரும் பெண்களைப் பாராட்டி வருகின்றனர்.
சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வர் கொட்டரை அணைக்கு குளிக்க வந்தபோது, செந்தமிழ் செல்வி, 38, முத்தம்மாள், 34, அனந்த வள்ளி, 34, ஆகிய மூன்று பெண்களும் தங்கள் துணிகளைத் துவைத்துக்கொண்டிருந்தனர்.
இளையர்கள் நீரின் ஆழம் தெரியாமல் நீந்தச் சென்று, கரையேற முடியாமல் தவித்ததை அடுத்து, பெண்கள் தங்கள் துவைத்துக்கொண்டிருந்த சேலையை நீரில் வீசி இரு இளைஞர்களைக் காப்பாற்றினர். மற்ற இருவர் நீரில் மூழ்கி இறந்தனர். அவர்களது உடல்கள் தீயணைப்புப் படையினரால் மீட்கப்பட்டு உடல்கூறு சோதனைக்காக பெரம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.