ஆறு மாதங்களுக்குப் பிறகு தஞ்சை பெரிய கோவிலில் அனுமதி

ஆறு மாதங்களுக்குப் பிறகு தஞ்சை பெரிய கோவிலில் அனுமதி

1 mins read
efbc080a-8439-4308-962b-47c70d99907f
படம்: தமிழக ஊடகம் -

தஞ்சை பெரிய கோவிலில் செவ்வாயன்று பக்தர்கள் பங்கேற்ற பிரதோஷ வழிபாடு நடந்தது. இந்த வழிபாட்டில் ஆறு மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்களின் உடல் வெப்ப நிலை சோதிக்கப்பட்டு, முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்கள் பால் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களைக் கொண்டுவரவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் அமர்வதற்காக சமூக இடைவெளியுடன் போடப்பட்டிருந்த வட்டத்தில் அமர்ந்து மகாநந்திக்கு நடந்த அபிஷேகம், தீபாராதனையை பக்தர்கள் கண்டுகளித்தனர்.