நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
விஜயகாந்துக்கு கோவிட்-19 சோதனையில் கொரோனா தொற்று இருப்பது செப்டம்பர் 22ஆம் தேதி உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது.
இந்நிலையில், தேமுதிக சார்பில் வெளியிட்ட அறிக்கையில் விஜயகாந்த் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கட்சித் தலைவர்களும் நடிகர்களும் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து திரும்ப வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.