சென்னை: தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களுக்கு தினமும் இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித் துள்ளது.
சென்னை சென்ட்ரல்-திரு வனந்தபுரம் சிறப்பு ரயில், சென்ட்ரல்-மங்களூரு சிறப்பு ரயில் நாளை 27ஆம் தேதி முதல் இயக்கப்பட வுள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கின் காரணமாக போடப்பட்டிருந்த பல கட்டுப்பாடுகளும் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகின்றன.
ஆலயங்கள், சுற்றுலாத் தளங்கள் முதல் பேருந்து, ரயில் போக்கு வரத்துகள் வரை படிப்படியாகத் திறந்துவிடப்பட்டு வருகின்றன.
இதனால் முடங்கிப் போயிருந்த மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பத் தொடங்கி உள்ளது.
இந்நிலையில், இந்த பொது முடக்கத் தளர்வுகளுக்கு பின்னர் தமிழகத்திற்குள் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக தற்போது வெளிமாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தற்போது ஊரடங்கு தளர்வு களால் மாவட்டங்களுக்குள் 13 பயணிகள் ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து சென்னை- திருவனந்த புரம், சென்னை-மங்களூரு வழித்தடங்களில் ரயில்களை இயக்கு வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திரு வனந்தபுரத்துக்கு இரவு 7.45 மணிக்கும் மங்களூருக்கு இரவு 8.10 மணிக்கும் சிறப்பு ரயில்கள் புறப்படும் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
சிறப்பு ரயில்களுக்கான முன் பதிவு காலை 8 மணி முதல் தொடங்கும் என்றும் ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்றும் கொரோனா அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக மைசூருக்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.