மீண்டும் மருத்துவமனையில் விஜயகாந்த்? வதந்தி பரப்பாதீர் என தேமுதிக வேண்டுகோள்

சென்னை: தேமு­திக தலை­வர் விஜ­ய­காந்த் மீண்­டும் மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக வெளி­யான தக­வல் அவ­ரது கட்­சித் தொண்­டர்­கள், ரசி­கர்­கள் மத்­தி­யில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

அவ­ரது உடல்­நிலை மீண்­டும் பாதிக்­கப்­பட்­ட­தாக வெளி­யான தக­வல் உண்மை அல்ல என்­றும் அவர் வழக்­க­மான உடல் பரி­சோ­த­னைக்­கா­கவே மருத்­து­வ­ம­னை­யில் அனுமதிக்­கப்­பட்டி­ருப்­பதாக­வும் அவ­ரது குடும்­பத்­தினர் தெரி­வித்­துள்­ள­னர்.

அண்­மை­யில் கொரோனா கிருமித் தொற்று பாதிப்­பு கார­ண­மாக சென்­னை­யில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் அனுமதிக்­கப்­பட்டு சிகிச்சை பெற்­றார் விஜயகாந்த். இதை­ய­டுத்து அளிக்­கப்­பட்ட சிகிச்­சை­யில் முழு­மை­யா­க குண­ம­டைந்து வீடு திரும்­பி­னார்.

எனினும் அவரை அருகில் இருந்து கவனித்துக்கொண்ட அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கிருமி தொற்றியது. அவரும் பின்னர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

கடந்த 2ஆம் தேதி வீடு திரும்­பிய விஜ­ய­காந்த், திடீ­ரென மீண்­டும் தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டது தேமு­திக தொண்­டர்­களை அதிர்ச்சி அடைய வைத்­தது. அவ­ரது உடல்­நிலை மோச­ம­டைந்­தி­ருப்­ப­தாக சமூக வலைத்­த­ளங்­களில் பலர் தக­வல்­களைப் பரப்­பி­னர்.

இந்­நி­லை­யில், இரண்­டாம்­ கட்ட மருத்­து­வப் பரி­சோ­த­னைக்­கா­கவே விஜ­ய­காந்த் மீண்­டும் மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக தேமு­திக தலை­மைக் கழ­கம் தெரி­வித்­துள்­ளது.

அவர் நல்ல உடல்­ந­லத்­து­டன் இருப்­ப­தா­க­வும் வீண் வதந்­தி­களை யாரும் நம்­பவேண்­டாம் என்­றும் தேமு­திக தலை­மைக் கழகம் அறிக்கை ஒன்­றில் கேட்டுக் ­கொண்­டுள்­ளது.

இதற்­கி­டையே விஜ­ய­காந்த் உடல்­நி­லை­யில் முன்­னேற்­றம் ஏற்­பட்­டுள்­ளது என்று அவ­ருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்­து­வ­மனை நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

“சீரான, திட்­ட­மி­டப்­பட்ட தொடர் சிகிச்­சைக்­காக விஜ­ய­காந்த் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார். அவ­ருக்கு கதி­ரி­யக்க மதிப்­பீடு செய்­யப்­பட்­டது. விஜ­ய­காந்த் விரை­வில் வீடு திரும்­பு­வார்,” என அம்­மருத்து­வ­மனை நிர்­வா­கம் மேலும் கூறி­யுள்­ளது.

அண்மைக் காலமாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார் விஜயகாந்த்.

இந்நிலையில் தேமுதிகவின் 14வது ஆண்டு விழாவையொட்டி கடந்த 14ம் தேதி தேமுதிக கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!