தமிழகத்தின் புதிய தலைமை செயலராக, ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதை தலைமைச் செயலர் சண்முகத்தின் பதவி நீட்டிப்பு காலம் நேற்று நிறைவடைந்தது. புதிய தலைமைச் செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ் ராஜ்வர்மா உட்பட பலர் முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசின் பணியில் இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் ரஞ்சன், அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு மாநில பணிக்கு அனுப்பப்பட்டு உள்ளார். இதையடுத்து தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.
இவர், மத்திய மீன்வளம் கால்நடை, பால்வளத்துறை செயலராக பதவி வகித்துள்ளார்.
ஏற்கெனவே முதல்வர் பொறுப்பில் உள்ள நெடுஞ் சாலைத்துறை செயலராக ராஜீவ் ரஞ்சன் நீண்ட காலம் பணியாற்றியவர். இவரும் வரும் செப்டம்பர் மாதத்துடன் ஓய்வு பெறவுள்ளார். தமிழக அரசின் தலைமைச்செயலாளர் பொறுப்பில் இருந்து நேற்று ஓய்வு பெற்ற சண்முகம், தமிழக அரசின் ஆலோ சகராக ஓராண்டு காலத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.