பண்டைய தமிழர் முறைப்படி திருமணம்

பண்டைய தமிழர் முறைப்படி திருமணம்

1 mins read
78b6a75c-d3c1-46b1-bb73-8344ddeb7531
படங்கள்: தமிழக ஊடகம் -

கன்­னி­யா­கு­மரி மாவட்­டம், நாகர்­கோ­வி­லில் இரு வேறு மதங்­க­ளைச் சேர்ந்த மண மக்­கள் தங்­க­ளது மதங்­க­ளைச் சேர்ந்த சடங்­கு­கள் எது­வும் இன்றி, பண்­டைய தமி­ழர் முறைப்­படி திரு­ம­ணம் முடித்­துள்­ள­னர். இது பல­ரது வர­வேற்­பை­யும் பெற்­றுள்­ளது.

மண­மக்­கள் ராஜன், ப்ரீத்தி இரு­வ­ரும் தமிழ்­மொழி மீது கொண்ட ஈடு­பாடு கார­ண­மாக பெற்­றோர்­கள் சம்­ம­தத்­து­டன் பண்­டைய தமி­ழர்­க­ளின் பாரம் பரிய சடங்­கு­க­ளோடு திரு­ம­ணம் செய்­து­கொண்­ட­னர்.

மண­ம­க­ளுக்கு மஞ்­சள் கிழங்­கால் ஆன தாலி கட்­டப் பட்­டது. மண­ம­க­னுக்கு 23 வகை­யான தானி­யங்­களில் ஆரத்தி எடுக்­கப்­பட்­டது. திரு மணத்­திற்கு வந்த அனைவருக்­கும் விதைப்­பந்து பரி­சாக அளிக்­கப்­பட்­டது.

திரு­மண நிகழ்­வில் பாரம்பரிய தமிழ் கலை­க­ளான சிலம்பாட்­டம், பறை­யாட்­டம் உள் ளிட்ட நடனம், தற்காப்புக் கலைகளும் களை­கட்­டின.