கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இரு வேறு மதங்களைச் சேர்ந்த மண மக்கள் தங்களது மதங்களைச் சேர்ந்த சடங்குகள் எதுவும் இன்றி, பண்டைய தமிழர் முறைப்படி திருமணம் முடித்துள்ளனர். இது பலரது வரவேற்பையும் பெற்றுள்ளது.
மணமக்கள் ராஜன், ப்ரீத்தி இருவரும் தமிழ்மொழி மீது கொண்ட ஈடுபாடு காரணமாக பெற்றோர்கள் சம்மதத்துடன் பண்டைய தமிழர்களின் பாரம் பரிய சடங்குகளோடு திருமணம் செய்துகொண்டனர்.
மணமகளுக்கு மஞ்சள் கிழங்கால் ஆன தாலி கட்டப் பட்டது. மணமகனுக்கு 23 வகையான தானியங்களில் ஆரத்தி எடுக்கப்பட்டது. திரு மணத்திற்கு வந்த அனைவருக்கும் விதைப்பந்து பரிசாக அளிக்கப்பட்டது.
திருமண நிகழ்வில் பாரம்பரிய தமிழ் கலைகளான சிலம்பாட்டம், பறையாட்டம் உள் ளிட்ட நடனம், தற்காப்புக் கலைகளும் களைகட்டின.