புதுடெல்லி: நாட்டுக்கு தற்போது தேவை சுவாசம்தான் என்றும், பிரதமரின் புதிய வீடு அல்ல என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கூறியுள்ளார்.
நகர்ப்புறங்களை அடுத்து இப்போது கிராமப் பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவி வருவதாக அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
"நகரங்களைத் தொடர்ந்து இப்போது கிராமங்களும் கடவுளைத்தான் நம்பியிருக்க வேண்டும். நாட்டு மக்களை மனதிற் கொண்டு பிரதமர் மோடி திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்," என ராகுல் தமது பதிவில் மேலும் வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா விவகாரம் தொடர்பில் மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் சமூக வலைத்தளங்களில் ராகுல் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.