அனுப்பூர்: சமோசா விலை உயர்வு குறித்த வாக்குவாதத்தால் கடையின் வாடிக்கையாளர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள அவலம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் அனுப்பூர் நகரில் உள்ள ஒரு கடையில் பஜ்ரு ஜெய்ஸ்வால் என்பவர் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து சமோசா வாங்கிச் சாப்பிட்டு உள்ளார்.
அப்போது அந்தக் கடைக்காரர் கஞ்சன் சாகு என்பவர், பணவீக்கத்தினால் சமோசாவின் விலை உயர்ந்துவிட்டதாகவும் இதனால் இரு சமோசாக்களின் விலை ரூ.15க்கு பதிலாக ரூ.20க்கு விற்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இதனை ஏற்க மறுத்து ஜெய்ஸ்வால் வாக்குவாதம் செய்துள்ளார். இதுபற்றி கடைக்காரர் போலிசில் புகார் அளிக்க, போலிசார் ஜெய்ஸ்வாலிடம் விசாரித்தனர். மறுநாளும் கடைக்கு வந்து சண்டை போட்ட ஜெய்ஸ்வால், தனது உயிரை தீவைத்து மாய்த்துக்கொண்டார்.