சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் குடிநீர் வசதியும் சுகாதாரமான கழிவறை வசதியும் உள்ளனவா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து உறுதி செய்யவேண்டும் என ஒரு வழக்கு விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டார்.
உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் வந்தால் அதன்மீதும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். அத்துடன், தண்ணீர் போத்தலை திரையரங்குக்குள் கொண்டுவர தடை விதிக்கும் திரையரங்கு நிர்வாகம், பார்வையாளருக்கு சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்கவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.