ஸ்ரீவைகுண்டம்: ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சி யகத்தை விரைவில் அமைப்பதற்கு ஏதுவாக, நேற்று ஞாயிறு முதல் மத்திய தொல்லியல்துறையினர் அகழாய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவை குண்டம் அருகே உள்ள ஆதிச்ச நல்லூரில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், இரும்பாலான ஆயுதங்கள், தங்கம், வெண்கலத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் உள்ளிட்ட ஏராளமான அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அத்துடன், அண்மையில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட அகழாய்விலும் ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருள்கள் போன்றவை கண்டறியப்பட்டு தமிழர்களின் தொன்மை குறித்து உலகுக்குப் பறைசாற்றின.
இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதை யடுத்து அருங்காட்சியக த்ம்தை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நேற்று நடந்தது.
இதுகுறித்து மத்திய அகழாய்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தென்னிந்தியாவிலேயே உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் முதன்முதலாக ஆதிச்ச நல்லூரில்தான் அமைக்கப்பட உள்ளது. இங்கு இதுவரை எடுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்படும்.
"அத்துடன், அகழாய்வு நடந்த பகுதிகளின் மேல் கண்ணாடியாலான தரைத்தளம் அமைத்து, அதன்மீது சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்று அகழாய்வு நடந்த பகுதிகளைப் பார்க்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.