தங்கப்பசை கடத்திய மூவர் கைது

தங்கப்பசை கடத்திய மூவர் கைது

1 mins read
2125f269-4186-4d81-9d2d-46edf93ef829
-
Google News Preferred Icon

சென்னை: ஷார்ஜாவில் இருந்து 2.55 கிலோ தங்கத்தை கடத்தி வந்த மூவர் கைதாகினர்.

சுங்கத்துறையினரை ஏமாற்றும் வகையில் தங்கத்தை மிக நூதன முறையில் தங்கப்பசையாக மாற்றி பத்து பொட்டலங்களில் அவர்கள் கொண்டு வந்தனர்.

சென்னை வந்தடைந்த விமானப் பயணிகளை நேற்று முன்தினம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது தங்கப்பசை அடங்கிய பொட்டலங்களை உடலுக்குள் மறைத்து வைத்திருந்த மூன்று பேர் சிக்கினர். இதையடுத்து, தங்கப்பசை பறிமுதல் செய்யப்பட்டு அதிலிருந்து 2.55 கிலோ தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது.