தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை; மக்களைக் காக்க மீட்புப் படையினர் ஆயத்தம் கனமழை: 26 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: வங்­கக் கட­லில் உரு­வான குறைந்த காற்­ற­ழுத்த தாழ்­வுப் பகுதி, தற்­போது ஆழ்ந்த காற்­ற­ழுத்த தாழ்­வுப் பகு­தி­யாக வலு­வ­டைந்­துள்­ளதை அடுத்து, தமி­ழ­கத்­தில் இன்று முதல் நான்கு நாட்­க­ளுக்கு கன­மழை பெய்­யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்­துள்­ளது.

சென்னை, திரு­வள்­ளூர், கட­லூர், விழுப்­பு­ரம், செங்­கல்­பட்டு, காஞ்­சி­பு­ரம், ராணிப்­பேட்டை ஆகிய ஏழு மாவட்­டங்­களும் கன­ம­ழை காரணமாக அதி­க பாதிப்புக்குள்ளா கும் சூழல் உள்ளதால் சிவப்பு எச்­ச­ரிக்­கை­ விடுக்­கப்­பட்­டுள்­ளது.

யூனி­யன் பிர­தே­ச­மான புதுச்­சே­ரிக்­கும் சிவப்பு எச்­ச­ரிக்கை விடுத்துள்ளனர்.

ஆங்காங்கே இந்த கனமழை பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்க தீயணைப்பு, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.

வட­த­மி­ழக கட­லோர மாவட்­டங் களில் தரைக்­காற்று மணிக்கு 50 கிலோ மீட்­டர் வேகத்­தில் வீசக்­கூடும் என­வும் கூறப்­பட்­டுள்­ளது.

குறிப்பாக, பாதிக்கப்படும் ஏழு மாவட்­டங்­க­ளி­லும் நிவாரணப் பணி­களை முடுக்கிவிடும்­படி அமைச்­சர்­க­ளுக்கு முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அறிவுறுத்தி உள்­ளார்.

இதை­ய­டுத்து இன்று நடை­பெற விருந்த அமைச்­ச­ர­வைக் கூட்­டம் நாளை 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்கின்றன.

இந்­நி­லை­யில், தொடர்ச்­சி­யாக கன­மழை பெய்து வரு­வ­தால் 26 மாவட்­டங்­களில் பள்­ளி­கள், கல்­லூ­ரி­க­ளுக்கு விடு­முறை அறி­வித்து அந்­தந்த மாவட்ட ஆட்­சி­யர்­களும் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ள­னர்.

சென்­னை­யில் நேற்று செய்தி யாளர்­க­ளைச் சந்­தித்த வானிலை ஆய்வு மைய இயக்­கு­நர் புவி­ய­ர­சன் கூறு­கை­யில், "சென்­னை­யில் இ­ருந்து 260 கி.மீ. தொலை­வில் தென்­கி­ழக்கு திசை­யில் காற்­ற­ழுத்த தாழ்வு மண்­ட­லம் நிலை கொண்­டுள்­ளது. இது புய­லாக வலுப்­பெறா­மல் இன்று காலை சென்­னைக்கு அருகே கரை­யைக் கடக்­கும். அதன்­பி­றகு இன்று மாலையில் மழை குறை­யத் தொடங்­கும்," என்­றார்.

இதற்கிடையே, "கன­ம­ழையை எதிர்­கொள்ள சென்னை மாந­க­ராட்சி தயார் நிலை­யில் உள்ளது. தாழ்­வான பகு­தி­களில் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக நீர் இறைக் ­கும் மோட்­டார் பம்­பு­கள் தயார் நிலை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளன. தண்­ணீர் தேங்­கும் பகு­தி­களில் பட­கு­களும் தயார் நிலை­யில் உள்­ளன. எதிர்­பார்த்த கன­மழை இது­வரை பெய்­ய­வில்லை. மழை பெய்­தால் உணவு வழங்கத் தயார் நிலை­யில் உள்­ளோம்," என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!