சென்னை: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதை அடுத்து, தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய ஏழு மாவட்டங்களும் கனமழை காரணமாக அதிக பாதிப்புக்குள்ளா கும் சூழல் உள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆங்காங்கே இந்த கனமழை பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்க தீயணைப்பு, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.
வடதமிழக கடலோர மாவட்டங் களில் தரைக்காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதிக்கப்படும் ஏழு மாவட்டங்களிலும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிடும்படி அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இதையடுத்து இன்று நடைபெற விருந்த அமைச்சரவைக் கூட்டம் நாளை 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் 26 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சென்னையில் நேற்று செய்தி யாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில், "சென்னையில் இருந்து 260 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது புயலாக வலுப்பெறாமல் இன்று காலை சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும். அதன்பிறகு இன்று மாலையில் மழை குறையத் தொடங்கும்," என்றார்.
இதற்கிடையே, "கனமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் இறைக் கும் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் தேங்கும் பகுதிகளில் படகுகளும் தயார் நிலையில் உள்ளன. எதிர்பார்த்த கனமழை இதுவரை பெய்யவில்லை. மழை பெய்தால் உணவு வழங்கத் தயார் நிலையில் உள்ளோம்," என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.