'அயலகத் தமிழர், தமிழகத்தை அரவணைத்து வாழுங்கள்'

'அயலகத் தமிழர், தமிழகத்தை அரவணைத்து வாழுங்கள்'

1 mins read
cb772f12-321a-45ee-b4a2-269bee237be1
-

சென்னை: வெளி­நா­டு­களில் உள்ள தமிழ்ச் சங்­கங்­க­ளு­டன் இணைந்து ஆண்­டு­தோ­றும் ஜன­வரி 12ஆம் தேதி உல­கத்­த­மி­ழர் புலம்­பெ­யர்ந்­தோர் நாளா­கக் கொண்­டா­டப்­படும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

அய­ல­கத் தமி­ழர் நாள் விழா­வில் பங்கேற்று பேசிய அவர், உல­க­ளா­விய இனம் ஒன்று உண்­டென்­றால் அது தமி­ழி­னம்­தான் என்றார்.

"எவ்­வ­ளவு உய­ர­மாக மரம் வளர்ந்­தா­லும் அது தன்­னு­டைய வேரை விட்­டு­வி­டு­வ­தில்லை என்­பதைப் போல தமிழை, தமிழ்­நாட்டை விட்டு விடா­தீர்­கள். அர­வ­ணைத்து வாழுங்­கள். தமி­ழ­கத்­துக்கு வாருங்­கள். உங்­க­ளது பிள்­ளை­க­ளுக்கு தமிழ்­நாட்­டைக் காட்­டுங்­கள்," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.

தமி­ழி­னம் 3,000 ஆண்­டு­களுக்கு முன்பே பண்­பாட்டி­லும் செழிப்­பி­லும் மேம்­பட்ட இனம் என்று குறிப்­பிட்ட அவர், இனத்­தின் பெரு­மையைப் பிள்­ளை­க­ளுக்கு எடுத்­துக்­கூற கீழ­டியை, ஆதிச்­ச­நல்­லூ­ரைக் காட்­டுங்­கள் என்­றார்.வெளி­நாடு வாழ் தமி­ழர் நல வாரி­யத்­துக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்ட அவர், உலகத்தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.