சிவகங்கை: கண் பார்வை இல்லாத ஜாகிர் உசேன் என்ற மாற்றுத்திறனாளி ஒருவர், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப கோழி இறைச்சியை பக்குவமாக வெட்டிக்கொடுத்து பிைழப்பு நடத்தி வருகிறார்.
தனது வருமானத்தில் இரு மகன்களைப் படிக்கவைத்துக் கொண்டு, மனைவியுடன் வாழ்ந்து வரும் இவர், "கோழி இறைச்சி விற்பனை மூலம் குடும்பச் செல வுக்கு போதுமான வருமானம் கிடைக்கிறது. ஆனாலும், மகன்களைப் படிக்கவைப்பதில்தான் சிர மத்தை எதிர்நோக்கி வருகிறேன்.
"தமிழக அரசு உதவிக்கரம் நீட்டினால் இந்தப் பார்வையற்ற மாற்றுத்திறனாளியின் வாழ்வில் ஒளி பிறக்கும்," என்கிறார் ஜாகிர் உசேன் நெகிழ்ச்சியாக.
சிவகங்கை மாவட்டம், சிங்கம் புணரி அருகே உள்ள புழுதிப்பட்டி கிராமத்தில் இவர் கறிக்கடை நடத்தி வருகிறார்.
கையில் ஒரு குச்சியுடன்தான் தனது வாழ்க்கை ஓடுவதாகக் கூறும் இவர், இடது கால் பக்கம் கல்லாப்பெட்டி உள்ளது, வலது கால் பக்கம் கோழிக்கறியை வெட்ட உதவும் மரக்கட்டை உள்ளது என நினைவில் நிறுத்தி கவனமாகச் செயல்படுகிறார்.
கறியை வெட்டுவது, காசு வாங்குவது என எல்லாமே அவர்தான். பார்வையில்லை என்ற சவாலுக்கு மத்தியில் பரபரப்பாக கோழியை வெட்டி விற்பனை செய்து வரும் இவரைப் பற்றிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வியப்பை ஏற்படுத்தி வருகிறது.
பார்வை சீரான நிலையில் உள்ளவர்கள்கூட காய்கறி நறுக்கும்போது சில நேரங்களில் கைக ளில் கத்தியால் வெட்டுபட்டு சிரமப் படுவதுண்டு. ஆனால், கூர்மையான கறிக்கடை கத்தியை பார்வை இல்லாதபோதும் லாவகமாகப் பயன்படுத்துகிறார் ஜாகிர் உசேன்.
பிரியாணிக்கா, கோழிக் குழம்புக்கா என வாடிக்கையாளர் களிடம் கேட்டுகேட்டு வெட்டிக் கொடுக்கிறார். பணத்தையும் அதன் அளவு வாரியாக தரம்பிரித்து கல்லாப்பெட்டியில் போடுகிறார்.
"கல்லூரி செல்லும் மூத்த மகனும் பள்ளி செல்லும் இளைய மகனும் விடுமுறை நாளில் உதவி செய்வார்கள். மற்ற நாள்களில் நான் மட்டுமே வேலைசெய்வேன். எனக்கு கறிக்கடைத் தொழில் பழகிப்போனதால் எல்லாம் அத்துப்படி," என்கிறார் ஜாகிர் உசேன்.