திருச்சி: தமிழகப் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டிகளில் வெற்றிபெற்ற 68 மாணவ, மாணவியர் கல்விச்சுற்றுலாவுக்காக நேற்று துபாய், சார்ஜாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் படித்து, தற்போது பிளஸ் 1 வகுப்பில் பயிலும் 68 மாணவர்கள் மாநில அளவில் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றனர்.
அவர்களை வெளிநாட்டு கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதாக அறிவித்திருந்த நிலை யில், நேற்று 35 மாணவர்கள், 33 மாணவிகள் என 68 பேர் துபாய், ஷார்ஜாவில் உள்ள முக்கிய இடங் களைச் சுற்றிப்பார்க்க அரசு சார்பில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஷார்ஜாவில் நடைபெறும் அனைத்துலக புத்தகக் கண்காட்சி, ஆய்வகம், சுற்றுலா மையங்களை அவர்கள் பார்வையிட உள்ளனர்.
அத்துடன், துபாய் செல்லும் மாணவர்கள் அங்கு மிகவும் உயர மான கட்டடமாக விளங்கும் புர்ஜ் கலீபா, கிராண்ட் மசூதி உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் சுற்றிப் பார்க்க உள்ளனர்.
மாணவ, மாணவியருடன் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச் சர் அன்பில் மகேஸ், "68 மாண வர்களுக்கும் தாயாகவும் தந்தை யாகவும் இருப்பேன். மாணவர்களின் திறமையை ஊக்குவித்து, அரசு சார்பில் அவர்களுக்கு உரிய அங்கீ காரம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
பள்ளிக் கல்வி முதன்மைச் செய லர் காகர்லா உஷா வெளியிட்டு உள்ள அரசாணையில், "நேற்று முதல் இம்மாதம் 13ஆம் தேதி வரை 68 மாணவர்கள் விமானம் மூலம் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். சுற்றுலாவுக்கான அனைத்துச் செலவுகளையும் துபாய் நகரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஏற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.