சென்னை: குழந்தைத்தனமான காரணங்களை முன் வைக்காமல், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் கட்டி முடிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருதுத்துவமனை தொடர்பாக மத்திய அரசு சரியான தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்றார்.
“மருத்துவமனைக்கான கட்டுமானப்பணிகள் நடைபெறும் பகுதியில் மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை என்றும் அதனால் தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப்பணிகளில் காலதாமதம் நிலவுகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
“இது குழந்தைத்தனமான, போலித்தனமான காரணம். இதுபோன்ற விளக்கங்களைக் கூறாமல் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை மத்திய அரசு விரைந்து முடிக்க வேண்டும்,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.