சமூகம்

மத்தியப் பொது நூலகத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி பிற்பகல் 2 முதல் 4 மணி வரை, ‘சிங்கப்பூர்ச் சிறுகதை நூற்றாண்டு (1924-2024): ஒரு வரலாற்றுப் பார்வை’ எனும் கலந்துரையாடல் நடைபெற்றது. அதை எழுத்தாளர் சிவானந்தம் வழிநடத்தினார்.
சிங்கப்பூர் சந்திக்கும் பல்வேறு சவால்கள், அவற்றைக் கடந்து முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் வழிகள், அதற்கான ஆற்றல்கள் குறித்த ஆய்வரங்க மாநாடு ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற்றது.
சனிக்கிழமை ஏப்ரல் 20ஆம் தேதி, ஜூரோங் குழும சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் ஏற்பாடு செய்த ‘சித்திரை வானவில்’ கொண்டாட்டங்கள், மாலை 5.30 முதல் 9 மணி வரை கிளமெண்டி சமூக மன்றத்தில் நடைபெற்றன.
பிள்ளைகளுக்குத் தமிழைக் கொண்டு சேர்க்க, முதலில் பெற்றோருக்கு அதன் முக்கியத்துவம் தெரியப்படுத்தப்பட வேண்டும் எனும் நோக்கில் மசெக சமூக அறநிறுவனம் போட்டிகள் நடத்தியுள்ளது.
ஆறு உலக நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயங்களை உள்ளடக்கிய ‘அப்பட்’ (Abbott) உலகப் பெரும் நெடுந்தொலைவு ஓட்டங்களை நிறைவு செய்த களிப்பில் திளைக்கிறார் வழக்குரைஞர் ரமேஷ் செல்வராஜ், 45.