தை செங் எம்ஆர்டி நிலையம் அருகே தீ

தை செங் எம்ஆர்டி நிலையம் அருகே உள்ள பொருள் சேமிப்புக் கிடங்கு ஒன்றின் மேற்கூரையில் இன்று காலை தீ மூண்டது.

எண் 29 கிம் சுவான் டிரைவில் ஏற்பட்ட தீச்சம்பவம் குறித்து காலை 11.35 மணியளவில் தனக்கு தகவல் அளிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. சமையலறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தீக்கிரையானதாக கூறப்படுகிறது.

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர மொத்தம் 40 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் 14 அவசரகால வாகனங்கள் காணப்பட்டன.

தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து நால்வர் வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது அந்தச் சேமிப்புக் கிடங்கின் மேற்கூரையில் தீ மளமளவென பரவிக் கொண்டிருந்தது.

இச்சம்பவத்தில் எவரும் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை.

பிற்பகல் 12.45 மணியளவில் தீ அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தீச்சம்பவத்திற்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!