மலேசியா வெள்ளம்: ராணுவம் உதவுகிறது

மலே­சி­யா­வில் சிலாங்­கூர் உள்­ளிட்ட ஆறு மாவட்­டங்­களில் கடும் மழை கார­ண­மாக வெள்­ளம் ஏற்­பட்­டுள்­ள­தால் ஏறத்­தாழ 14,000 பேர் வேறு இடங்­க­ளுக்­குச் செல்ல வேண்­டிய நிலை ஏற்­ப­டுள்­ளது.

வெள்­ளத்­தில் இருந்து மக்­களை மீட்கவும் இதர உத­விக­ளைச் செய்­ய­வும் ஆயு­தப்­ப­டை­களும் காவல்­து­றை­யும் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

பாகாங் மாநி­லத்­தில் மட்­டும் மொத்­தம் 5,189 பேர் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக நேற்று தக­வல்­கள் தெரி­வித்­தன.

சிலாங்­கூ­ரில் பருவ மழை காலத்­தின்­போது எப்­போ­தா­வ­து­தான் இப்­படி நிக­ழும். அங்கு திடீ­ரென வெள்­ளம் ஏற்­பட்­டு­விட்­ட­தால் ஒரே குழப்­ப­மா­கி­விட்­டது என்று பிரதமர் இஸ்­மா­யில் சாஃப்ரி யாக்­கோப் கூறியதாக தி ஸ்டார் தெரி­வித்­தது.

என்­றா­லும் பாகாங், கிளந்­தான் போன்ற மாநி­லங்­களில் ஆண்டு இறு­தி­யில் எப்போ­தும் மழை இருக்­கும். அத­னால் பாதிப்­பு­கள் இருக்­கும் என்று அவர் கூறி­னார்.

நாடு முழு­வ­தும் 5,731 நிவா­ரண நிலை­யங்­கள் அமைக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அவை 1.63 மில்­லி­யன் மக்­க­ளுக்கு இடம் கொடுக்­கும் என்­றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

மலே­சி­யா­வில் பரு­வ­மழை அக்­டோ­பரில் தொடங்­கி­யது. மார்ச்வரை நீடிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மலே­சிய மாமன்­னர் சுல்­தால் அப்­துல்லா அகம்­மது ஷா கோலா­லம்­பூ­ரில் வெள்ள சூழ்­நி­லையை முழங்­கால் அளவு தண்­ணீரில் நடந்து சென்று பார்­வை­யிட்­டார்.

இப்­போ­தைய வெள்ள நிலைமை 1971ல் ஏற்­பட்ட பேரி­டர் அள­வுக்கு இருப்­ப­தாக மாமன்­னர் தெரி­வித்­தார்.

இவ்­வே­ளை­யில், கோலா­லம்­பூர், சிலாங்­கூர், பேராக், பாகாங்­கில் மழை தொட­ரும் என்று மலே­சிய வானிலைத் துறை நேற்று அதி­காலை எச்­ச­ரிக்கை விடுத்­தது.

பல மாநி­லங்­களில் கடும் மழை பெய்­யும் என்று அது ஆரஞ்­சு­நிற எச்­ச­ரிக்­கை­யைப் பிறப்­பித்­தது.

இவ்­வே­ளை­யில், கோலா­லம்­பூர்-கராக் விரை­வுச்­சா­லை­யில் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டது. மரங்­கள் வேரோடு சாய்ந்­தன. இத­னால் ஏரா­ள­மான வாக­னங்­கள் சாலை­யி­லேயே தேக்­கம் அடைந்­தன. சமூக ஊட­கங்­கள் வெள்­ளத்­தைக் காட்­டும் சாலை­க­ளின் பல்­வேறு படங்­களை வெளி­யிட்­டன.

மலே­சிய மேற்குக் கடற்­க­ரை­யி­லும் மலாக்கா நீரி­ணை­யி­லும் கடும் மழை­யும் வலு­வான காற்­றும் வீசக்­கூ­டும் என்று சனிக்­கி­ழமை தேசிய நீர்­நிலை கண்­காணிப்பு நிலை­யம் எச்சரித்தது.

சிலாங்­கூ­ரில் வர­லாறு காணாத மழை பெய்து வரு­வ­தால் பல பகு­தி­க­ளி­லும் வெள்­ளம் ஏற்­பட்டு இருப்­ப­தாக அந்த மாநில முதல்­வர் அம்­ரு­தீன் ஷாரி சனிக்­கி­ழமை தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!