வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டனில் இன்று தொடங் கும் அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் முக்கியமாக ஐஎஸ் போராளிகளின் மிரட்டல் குறித்து விவாதிக்கப்படவுள் ளது. ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வரும் ஐஎஸ் பயங்கரவாதக் குழுவின் மிரட்டல் குறித்தும் அவர்களை துடைத்தொழிக்க எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்தும் அமெரிக்க அதிபர் ஒபாமா, உலகத் தலைவர்களுடன் பேச்சு நடத்த விருப்பதாக அதிபர் மாளிகைப் பேச்சாளர் ஜோஸ் எர்னஸ்ட் கூறினார்.
இன்றும் நாளையும் நடைபெறும் அந்த மாநாட்டில் சீனா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட 50 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதாக இருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், லாகூர் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக தனது பயணத்தை ரத்து செய்தார். பிரசல்ஸில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சில நாட் களில் உலகத் தலைவர்களின் சந்திப்பு இடம்பெறுகிறது.
பிரசல்ஸில் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட இப்ராகிம், காலிட் ஆகிய இரு சகோதரர் களுக்கு அணு ஆயுதப் பொருட்களைப் பெற ஐஎஸ் மேற்கொண்டு வரும் முயற்சிகளுடன் தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. அணுவாயுதப் பொருட்களைப் பெற ஐஎஸ் பயங்கரவாதிகள் மேற் கொண்டுவரும் முயற்சிகள் பற்றிய தற்போதைய கவலையை பிரசல்ஸ் தாக்குதல் சம்பவம் உணர்த்துவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு மன்றத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். இதற்கிடையே ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்துமாறு தேசியப் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டதாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.