அலெப்போ: சிரியாவின் அலெப்போ நகரில் கடந்த ஒரே வாரத்தில் மருத்துவமனையில் 50 பேர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இறந்துள்ள நிலையில் போர் நிறுத்த உடன்பாட்டை இனி நீட்டிப்பது கடினம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார். சிரியாவில் அதிபர் ஆசாத் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது.
அந்த நாட்டின் பெரும் பகுதி ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் மிதவாத எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டிலும் சில பகுதிகள் உள்ளன. இந்நிலையில் அமெரிக்கா, ரஷ்யாவின் முயற்சியால் அதிபர் ஆசாத்துக்கும் மிதவாத எதிர்க்கட்சிகளுக்கும் இடையே அண்மையில் சண்டைநிறுத்தம் அமலுக்கு வந்தது. அதன்படி தலைநகர் டமாஸ்கஸ், லத்திகா உள்ளிட்ட பகுதிகளில் போர் நிறுத்தப்பட்டிருந்தது.
அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் லாரி ஒன்று நேற்று முன்தினம் போராளிகள் வசம் இருக்கும் டெயிர் மாலா கிராமத்தைக் கடந்து மத்திய சிரியாவில் உள்ள ஹோம்ஸ் நகரின் புறநகர் பகுதியைத் தாண்டி டல்பிசே நகருக்குச் சென்றது. படம்: ஏஎஃப்பி