துப்பாக்கி கட்டுப்பாடு மசோதாவை அமெரிக்க செனட் நிராகரித்தது

வா‌ஷிங்டன்: துப்பாக்கி கட்டுப்பாடு தொடர்பான நான்கு மசோதாக் களை அமெரிக்க செனட் சபை நிராகரித்துள்ளது. பயங்கரவாத கண்காணிப்புப் பட்டியலில் உள்ளவர்களுக்கு துப்பாக்கி விற்பதை கட்டுப் படுத்துவது உள்ளிட்ட நான்கு மசோதாக்கள் செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டன. ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள ஆர்லாண்டோ நகரில் ஓர் இரவு கேளிக்கை விடுதியில் ஒரு துப்பாக்கிக்காரன் 49 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து துப்பாக்கி கட்டுப்பாடுகளை இன்னும் கடுமையாக்குவது குறித்த யோசனைகள் அமெரிக்க செனட் சபையில் முன் வைக்கப்பட்டன. ஜனநாயகக் கட்சியினர் தாக்கல் செய்த மசோதாவுக்கு எதிராக குடியரசுக் கட்சி செனட்டர்கள் வாக்களித்தனர். அதே போல குடியரசுக் கட்சியினர் தாக்கல் செய்த மசோதாவை ஜனநாயகக் கட்சியினர் நிராகரித் தனர். எதிர்காலத்தில் பயங்கர வாதத் தாக்குதல்களை எவ்வாறு தடுப்பது என்பதில் குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் வேறுபட்ட கருத்து களைக் கொண்டிருந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!