காணாமற்போன 16,000 தமிழர்களின் கதி என்ன என்று விளக் கம் அளிக்குமாறு இலங்கை அரசை அனைத்துலக செஞ் சிலுவைச் சங்கம் நெருக்கி உள்ளது.
ஜெனிவாவைத் தளமாகக் கொண்ட இச்சங்கம் கடந்த 14 மாதங்களாக நடத்திய ஆய்வின் அறிக்கைகையை வெளியிட்டுள்ளது. ஆண்டுகள் பல கடந்து விட்டபோதிலும் இலங்கையில் தங்களது உறவுகளைத் தொலைத்த தமிழ் மக்கள் இன்னும் அவர்களைத் தேடிக்கொண்டு இருப் பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
1989ஆம் ஆண்டு முதல் காணாமற்போனவர்களின் விவரங்களை பதிவு செய்திருப்பதாகச் சங்கம் குறிப்பிடுகிறது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தொலைந்துபோன தங்களது உற வினர்கள் மாண்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள். உறவுகள் எங்கோ ஒரு மூலையில் உயி ருடன் இருப்பதாக ஒரு பகுதியி னரும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என மற்றொரு பகுதியினரும் ஆய்வில் தெரி வித்துள்ளனர்.
395 இலங்கைத் தமிழ்க் குடும்பங்களிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வைத் தொகுத்து 34 பக்க அறிக்கையாகச் செஞ் சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ளது.
உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா ஒருவேளை உயிருடன் இருந்தால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரங் களை இலங்கை அரசு பகிரங்க மாக வெளியிட வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் இல்லாததால் ஏராளமான மக்கள் தங்களது வாழ்க்கையை நடத்தச் சிரமங்களை எதிர்நோக்கி வரு வதாகக் குறிப்பிடும் அறிக்கை, அவர்களைக் கண்டறிந்து நிவாரண உதவிகளை அரசாங்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது. 2015 ஜனவரியில் அதிபராகப் பொறுப்பேற்ற மைத்திரிபால சிறி சேன காணாமற்போனவர்கள் தொடர்பாக அ-லுவலகம் ஒன்றைத் திறக்க உத்தரவிட்டார். ஆனால், கடந்த மாதம் இலங்கை வெளியிட்ட அறிவிப்பு உறவுகளைத் தொலைத்தவர் களுக்கு வேதனையைக் கொடுத்தது. இதுவரை காணாமல் போன வர்களை மாண்டவர்கள் என அங்கீகரிக்கும் சட்டம் ஒன்றை அரசாங்கம் இயற்றியதே வே தனைக்குக் காரணம்.