பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சாபா மாநிலத்தில் 61 வயது ஆடவருக்கு ஸிக்கா கிருமி தொற்றியிருப்பதை மலேசிய அதிகாரிகள் உறுதிப்படுத் தியுள்ளனர். இவரையும் சேர்த்து மலேசி யாவில் இருவருக்கு இக்கிருமி தொற்றி யிருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. சாபாவைச் சேர்ந்த அந்த ஆடவர் ஆகஸ்ட் 27ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 30ஆம் தேதி மருத்துவரை அவர் நாடியதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிசாம் அப்துல்லா கூறினார். அவருக்கு ஸிக்கா கிருமி தொற்றியிருப்பது சோதனை மூலம் உறுதிப்படுத்தப் பட்டதாக நூர் ஹிசாம் கூறினார்,
ஏற்கெனவே சிங்கப்பூருக்கு சென்று திரும்பிய மலேசிய மாது ஒருவருக்கு அக்கிருமி தொற்றி யிருப்பதை மலேசியா உறுதிப் படுத்தியது. சிங்கப்பூரில் வசிக்கும் அல்லது வேலை செய்யும் 11 மலேசியர்களுக்கு அக்கிருமி தொற்றியிருப்பதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சு கூறியது. இதற்கிடையே சிங்கப்பூரி லிருந்து திரும்பிய மலாக்காவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தனிமைப் படுத்தப் பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஸிக்கா கிருமி தொற்றியிருப்பது உறுதி செய்யப் படவில்லை என்று மலாக்கா முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி, சிங்கப்பூரிலிருந்து திரும்பிய அம்மூவருக்கும் ஸிக்கா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என மலாக்கா முதலமைச்சர் இட்ரிஸ் ஹரூண் கூறியிருந்தார். கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி சிங்கப்பூருக்குச் சென்ற அம்மூவருக்கும் ஸிக்கா தொற்றியதற்கான எந்த அறிகுறி யும் இல்லை என இட்ரிஸ் ஹரூண் தெரிவித்தார்.