தைப்பே: தைவானைத் தாக்கும் கடும் சூறாவளிக் காற்றினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளனர். பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பள்ளிக்கூடங்களும் அலு வலகங்களும் மூடப்பட்டன. பலத்த காற்று வீசுவதால் நூற்றுக்கணக் கான விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டு வாரங்களில் தைவானைத் தாக்கும் மூன்றாவது சூறாவளிக் காற்று இதுவாகும். தைவானின் கிழக்குப் பகுதி யில் பலத்த சூறாவளிக் காற்று வீசுவதுடன் கனமழையும் தொடர்ந்து பெய்வதாக தகவல்கள் கூறுகின்றன. சுமார் 5,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் 650,000 குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவிக்க நேர்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.
வீசிய பலத்த காற்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் கீழே விழுந்தார். படம்: ராய்ட்டர்ஸ்