ஜகார்த்தா: காப்பியில் 'சைனாய்ட்' விஷத்தைக் கலந்து தமது தோழியைக் கொலை செய்த ஜெசிக்கா குமாலா வோங்சோவுக்கு இந்தோனீசிய நீதிமன்றம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. 28 வயது ஜெசிக்கா தமது தோழியான மிர்னா சலிஹினைத் திட்டமிட்டுக் கொலை செய்தது வழக்கு விசாரணையில் நிரூபணமான தை அடுத்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. ஜெசிக்காவின் காதலர் ஒரு போதைபொருள் புழங்கி என்பதால் அவருடனான உறவை முறித்துக்கொள்ளுமாறு ஜெசிக்காவுக்கு மிர்னா அறிவுரை கூறியிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது.
அதனால் ஆத்திரமடைந்த ஜெசிக்கா மிர்னாவைத் உணவகம் ஒன்றுக்கு வரவழைத்து அவருக்குத் தெரியாமல் காப்பியில் 'சைனாய்ட்' விஷத்தை கலந்து கொடுத்து கொலை செய்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறி ஞர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர். ஜெசிக்காவும் மிர்னாவும் ஆஸ்திரேலியாவில் ஒன்றாகப் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு விசாரணை நேற்று இந்தோனீசியாவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.