‘விஷக் காப்பி’ கொலையாளிக்கு 20 ஆண்டுசிறை

ஜகார்த்தா: காப்பியில் 'சைனாய்ட்' விஷத்தைக் கலந்து தமது தோழியைக் கொலை செய்த ஜெசிக்கா குமாலா வோங்சோவுக்கு இந்தோனீசிய நீதிமன்றம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. 28 வயது ஜெசிக்கா தமது தோழியான மிர்னா சலிஹினைத் திட்டமிட்டுக் கொலை செய்தது வழக்கு விசாரணையில் நிரூபணமான தை அடுத்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. ஜெசிக்காவின் காதலர் ஒரு போதைபொருள் புழங்கி என்பதால் அவருடனான உறவை முறித்துக்கொள்ளுமாறு ஜெசிக்காவுக்கு மிர்னா அறிவுரை கூறியிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது.

அதனால் ஆத்திரமடைந்த ஜெசிக்கா மிர்னாவைத் உணவகம் ஒன்றுக்கு வரவழைத்து அவருக்குத் தெரியாமல் காப்பியில் 'சைனாய்ட்' விஷத்தை கலந்து கொடுத்து கொலை செய்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறி ஞர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர். ஜெசிக்காவும் மிர்னாவும் ஆஸ்திரேலியாவில் ஒன்றாகப் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு விசாரணை நேற்று இந்தோனீசியாவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!