வாஷிங்டன்: அமெரிக்க மக்கள் தங்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க இன்று வாக்களிக்க வுள்ள நிலையில் ஹில்லரியின் மின்னஞ்சல் விவகாரம் தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டுவதற்கோ அல்லது நடவடிக்கை எடுப்பதற் கோ எந்தக் காரணமும் இல்லை என்று மத்திய புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது. ஹில்லரியின் தனிப்பட்ட மின்னஞ்சல்களை மீண்டும் ஆய்வு செய்த விசாரணைக் குழுவினர், அந்த விவகாரம் குறித்து மத்திய புலனாய்வுத் துறையினர் முன்பு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதை கண்டறிந்ததாக மத்திய புலனாய்வுத் துறையின் தலைவர் ஜேம்ஸ் கொமே கூறினார்.
இந்த விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடத்தப் போவதாக அண்மையில் அறி வித்திருந்த திரு ஜேம்ஸ், தேர்தல் நாளுக்கு முதல் நாள் அந்த விவகாரம் தொடர்பில் ஹில்லரி மீது குற்றம் சாட்டுவதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறினார். அவரது இந்த அறிவிப்பு ஹில்லரிக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
கிளிவ்லாந்தில் பிரசாரப் பேரணியில் ஹில்லரியுடன் கூடைப்பந்து விளையாட்டு வீரர் லெப்ரோன் ஜேம்ஸ். படம்: ராய்ட்டர்ஸ்