கோலாலம்பூர்: மலேசியாவின் ரிங்கிட் நாணயம் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெளிநாட்டு நிதிச் சந்தைகளில் வீழ்ச்சியடைந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது. இதன் மதிப்பு அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 4.53 ரிங்கிட்டுகள் என பரிவர்த்தனை கண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்துப் பேசிய மலேசிய மத்திய வங்கி ஆளுநர் முகம்மது இப்ராகிம் நிதிச் சந்தையை நிலைப்படுத்த தற்காலிக நடவடிக்கைகளை எடுக்குமாறு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். "தற்போதைய நிலைமைக்கு யூக நடவடிக்கைகளே காரணம். இதை சரிசெய்வது மத்திய வங்கியின் பொறுப்பு," என்றார் அவர்.