அலெப்போவிலிருந்து வெளியேறும் மக்களும் போராளிகளும்

டமாஸ்கஸ்: சிரியாவின் அலெப்போ நகரை அரசாங்கப் படை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததைத் தொடர்ந்து அங்கிருந்து போராளிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியிருக் கிறது. இதற்கு முன்னதாக, மருத்துவ கவனிப்பு தேவைப்படும் நோயாளி களையும் சண்டையில் காயமுற்ற மக்களையும் ஏற்றிக்கொண்டு முதல் வாகனம் அலெப்போ நகரி லிருந்து நேற்று புறப்பட்டுச் சென்றதாக மனித உரிமை கண்காணிப்புக் குழு தெரி வித்துள்ளது. அலெப்போவின் கிழக்குப் பகுதியிலிருந்து போராளிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கிவிட்டதாக சிரியா நாட்டு அதிகாரத்துவ தகவல்கள் கூறின. கடந்த நான்கு ஆண்டுகளாக போராளிகள் வசம் இருந்த அலெப்போ நகரை சிரியா அதிபர் ஆசாத்தின் படை மீண்டும் தங்கள் வசம் கொண்டு வந்தது.

அரசாங்கப் படை தாக்குதல் நடத்தியபோது அங்கிருந்து தப்பியோட முயன்ற பொதுமக்களில் பலர் காயம் அடைந்தனர். அவ்வாறு காயமுற்ற, மருத்துவ கவனிப்பு தேவைப்படும் பெண்களும் குழந்தைகளும் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் மூலம் அலெப்போ நகரிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். காயமுற்ற ஒரு மாது வாகனத்தின் பின்புறத்தில் சாய்ந்துகொள்ள ஒருவர் உதவுகிறார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!