இந்தோனீசியத் தலைநகரான ஜகார்த்தாவில் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த சந்தை ஒன்றில் பற்றிய தீ கொழுந்துவிட்டெரிந்தது. நூற்றுக்கணக்கான தீயணைப்பாளர்கள் போராடி தீயை அணைக்க முற்பட்டனர். அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. டச்சு காலனி ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பசார் செனென் சந்தையின் முதல் தளத்தில் நேற்று அதிகாலை வேளையில் பற்றிய தீ, மளமளவெனப் பரவியது. 50 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதும் நேற்று மதிய வேளையிலும் தீயை அணைக்க வீரர்கள் போராடிக் கொண்டிருந்ததாக ஏஎஃப்பி தெரிவித்தது. தீயில் சிக்கி யாரும் பலியாகவில்லை எனவும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது எனவும் கூறப்பட்டது. திங்கட்கிழமைச் சந்தை எனப் பொருள்படும் பசார் செனெனில் இதற்கு முன்பும் பல பெரிய தீவிபத்துகள் நிகழ்ந்துள்ளன. படம்: ஏஎஃப்பி
வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தையில் கொழுந்துவிட்டெரிந்த தீ
20 Jan 2017 08:29 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Jan 2017 07:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!