வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தையில் கொழுந்துவிட்டெரிந்த தீ

இந்தோனீசியத் தலைநகரான ஜகார்த்தாவில் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த சந்தை ஒன்றில் பற்றிய தீ கொழுந்துவிட்டெரிந்தது. நூற்றுக்கணக்கான தீயணைப்பாளர்கள் போராடி தீயை அணைக்க முற்பட்டனர். அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. டச்சு காலனி ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பசார் செனென் சந்தையின் முதல் தளத்தில் நேற்று அதிகாலை வேளையில் பற்றிய தீ, மளமளவெனப் பரவியது. 50 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதும் நேற்று மதிய வேளையிலும் தீயை அணைக்க வீரர்கள் போராடிக் கொண்டிருந்ததாக ஏஎஃப்பி தெரிவித்தது. தீயில் சிக்கி யாரும் பலியாகவில்லை எனவும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது எனவும் கூறப்பட்டது. திங்கட்கிழமைச் சந்தை எனப் பொருள்படும் பசார் செனெனில் இதற்கு முன்பும் பல பெரிய தீவிபத்துகள் நிகழ்ந்துள்ளன. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!