வாஷிங்டன்: அமெரிக்காவில் பணியாற்றிய இந்திய பொறியாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கான்சாஸ் மாநிலத்தின் ஒலாதே நகரில் உள்ள ஓர் அமெரிக்க நிறுவனத்தில் பொறி யாளராகப் பணியாற்றி வந்த ஆந்திராவைச் சேர்ந்த 32 வயது ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்பவரை அமெரிக்கர் ஒருவர் சுட்டுக் கொன்றதாக அமெரிக்கப் போலிசார் தெரிவித்துள்ளனர். அதே பகுதியில் உள்ள ஒரு மதுபான விடுதியில் கடந்த புதன்கிழமை ஸ்ரீனிவாஸ் தன் நண்பர் ஒருவருடன் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான விளை யாட்டுப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அமெரிக்கர் ஒருவர் அவ்விருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.
ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா. படம்: ஊடகம்