வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்னாள் அதி பர் ஒபாமா ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட பருவநிலை மாற்றக் கொள்கைகளை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத் திட்டுள்ளார். ஒபாமா அதிபராக இருந்தபோது பருவநிலை மாற்றம் தொடர்பான தடைகளை நோக்கமாகக் கொண்டு அந்த விதிமுறைகள் அமல்படுத்தப் பட்டன. அவற்றைத் திரும்பப் பெறும் நிர்வாக ஆணையில் கையெழுத் திட்ட அதிபர் டிரம்ப், இதன் மூலம் நிலக்கரி எரிசக்தி மீதான தடை நடவடிக்கைப் போரை முடிவுக்கு கொண்டுவர இயலும் என்று தெரி வித்துள்ளார். புதிய ஆணை ஒபாமாவின் பத்துக்கு மேற்பட்ட நடவடிக்கை களைத் தடை செய்கிறது. அதிபர் டிரம்ப் தடை உத்தரவில் கையெழுத்திட்டதை நிலக்கரிச் சுரங்க அதிபர் வரவேற்றபோதிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண் டனம் தெரிவித்துள்ளனர்.
நிலக்கரிச் சுரங்க அதிபர்களும் பணியாளர்களும் சுற்றி நிற்க 'எரிசக்தி சுதந்திரம்' என்னும் புதிய ஆணையில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப். படம்: ராய்ட்டர்ஸ்