சோல்: வடகொரியாவுடன் கொள்கை ரீதியில் அமெரிக்கா பின்பற்றி வந்த பொறுமையான போக்கை இனியும் தொடர வாய்ப்பில்லை என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். ஆசியப் பயணத்தின் முதல் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை தென்கொரியாவுக்கு வந்துசேர்ந்த திரு பென்ஸ் இரு கொரியாக் களையும் பிரிக்கும் அதிக பாதுகாப்பு மிக்க பகுதிக்கு நேற்று வருகையளித்தபோது இவ்வாறு கூறினார். வடகொரியாவுடன் அமெரிக்கா பின்பற்றிய பொறுமை சகாப்தம் முடிந்துவிட்டது என்று திரு பென்ஸ் குறிப்பிட்டார்.
தென்கொரியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், இரு கொரியாக்களையும் பிரிக்கும் ஒரு பகுதியிலிருந்து வடகொரியாவைப் பார்வையிடுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்