லண்டனில் திடீர் சோதனை; பெண் சுடப்பட்டார்

லண்டன்: லண்டனில் பயங்கர வாத நடவடிக்கைகளுக்கு எதி ராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக் கைகளில் ஒரு பெண்ணை போலிசார் சுட்டனர். வடமேற்கு லண்டனில் உள்ள ஒரு இடத்தில் இருபதுகளில் இருந்த ஒரு பெண் சுடப்பட்டார் என்று காவல்துறை அறிக்கை தெரிவித்தது. பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணை யின் ஒரு பகுதியாக இது இடம் பெற்றது என்றும் காவல் துறை யினர் குறிப்பிட்டனர். விசாரணை வலையில் சிக்கி யிருந்த அந்தப்பெண்ணுக்கு தற் போது மருத்துவமனையில் பலத்த காவலுக்கு இடையே சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவத்தன்று பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் தொடர்பில் மூவரை போலிசார் கைது செய்த னர். இவர்களில் ஒருவர் 16 வயது இளையர். மற்ற இருவரும் 20 வயதுகளில் இருந்த ஒரு பெண், ஒரு ஆண். தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள கென்ட் வட்டாரத்திலும் 43 வயது பெண்ணை போலிசார் கைது செய்தனர். நால்வரும் பயங்கரவாத நடவடிக்கை களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ளனர்.

மத்திய லண்டன் வட்டாரத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரை அதிகாரிகள் அழைத்துச் செல்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!