பாதுகாப்புக்கு மிரட்டல்; துருக்கி நாட்டவர் மூவர் மலேசியாவில் கைது

கோலாலம்பூர்: பாதுகாப்பு காரணங் களுக்காக துருக்கி நாட்டைச் சேர்ந்த மூன்றாவது நபரை போலிசார் கைது செய்திருப்பதாக தகவல்கள் கூறின. முன்னதாக இந்த வாரம் துருக்கியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுக்கு நிதி உதவி வழங்கியதான சந்தேகத்தின் பேரில் அவ் விருவரும் கைது செய்யப்பட்டனர். இஸ்மெட் ஒஸிலிக் வியாழக் கிழமை கைது செய்யப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் கூறினார். தேசிய பாதுகாப்புக்கு மிரட்டலாக விளங்கியதால் இஸ்மெட் கைது செய்யப்பட்டதாக மலேசிய போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கூறியதாக ஊடகங்கள் கூறின. குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவரைத் தாக்கியதற்காக இஸ்மெட் ஆரம்பத்தில் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப் பட்டதாகவும் அவர் ஜனவரி மாதம் பிணையில் விடுவிக்கப்பட்ட தாகவும் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!