அருஷா: கிழக்கு ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் பள்ளி சிறுவர்களை ஏற்றிச்சென்ற ஒரு பேருந்து சாலையைவிட்டு விலகி ஆழமான பள்ளத்தில் விழுந்ததில் அந்த பேருந்தில் சென்ற 36 பேர் உயிரிழந்தனர் என்றும் அவர் களில் 33 பேர் சிறுவர்கள் என்றும் அதிகாரிகள் கூறினர். அந்த பேருந்தில் சென்ற சிறுவர்கள் அனைவரும் 12 வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் தேர்வு எழுதுவதற்காக மாணவர் கள் மற்றொரு பள்ளிக்கூடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது சனிக்கிழமை விபத்து நிகழ்ந்ததாகவும் போலிசார் கூறினர். அந்தப் பேருந்து, அருஷா நகரில் இயற்கை எழில்மிக்க, மரங்களும் செடிகளும் நிறைந்த மலைப் பகுதியில் ஆற்றங் கரையோரமாக சென்று கொண்டி ருந்தபோது ஆற்றங்கரை ஓரமாக உள்ள பெரிய பள்ளத்தில் விழுந்ததாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
டான்சானியாவில் பள்ளிக்கூட சிறுவர்களை ஏற்றிச்சென்ற ஒரு பேருந்து குன்றுகள் நிறைந்த பகுதியில் சாலையைவிட்டு விலகி பெரிய பள்ளத்தில் விழுந்ததில் சிறுவர்கள் 33 பேர் உட்பட 36 பேர் உயிரிழந்தனர். அந்த இடத்தில் குடியிருப்பாளர்கள் கூடியுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்