மலேசியாவின் உணவுப்பொருள் வரி விதிப்பு திட்டம் ரத்து

பெட்டாலிங் ஜெயா: மலேசியா வரும் ஜூலை 1ஆம் தேதியிலிருந்து 60 வகையான உணவு பொருட்களுக்கு 'ஜிஎஸ்டி' எனும் பொருள் சேவை வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந் தது. ஆனால் இந்தத் திட்டம் கைவிடப் பட்டதாக நேற்று காலை தெரிவிக்கப் பட்டது. நிதி அமைச்சுடன் ஆலோசனை நடத்திய பிறகு வரி விதிப்பு திட்டம் ரத்து செய்யப்படும் முடிவு எடுக்கப் பட்டதாக சுங்கத்துறையின் தலைமை இயக்குநர் சுப்பிரமணியம் துளசி தெரி வித்தார். "இந்த விவகாரத்தில் நிதி அமைச் சின் கருத்து அறியப்பட்டது. இதை யடுத்து வரி விதிப்பு உத்தரவு ரத்து செய்யப்பட்டது," என்றார் அவர்.

தேநீர், காபி, சில வகை மீன்கள், சோளம், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், இறக்குமதி செய்யப்படும் அவோ காடோ, ஆப்ரிகாட், அத்திப்பழம் உள் ளிட்ட உணவுப்பொருட்களுக்கு ஆறு விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று முன்பு சுங்கத் துறை அறிவித் தது. பீ ஹுன், லக்சா, மீ, தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்களுக்கும் வரி விதிக்கப்படுவதாக இருந்தது. இவற்றில் பெரும்பாலானவை மலே சியர்கள் அன்றாடம் அதிகம் பயன் படுத்தாத உணவுப்பொருட்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் 60 உணவுப் பொருட் களுக்கு வரி விதிக்கும் திட்டம் ஏன் கைவிடப்பட்டதற்கான காரணங்களை மலேசிய சுங்கத்துறை வெளியிடவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!