லண்டன்: பிரிட்டிஷ் மருத்துவர் ஒருவர், முப்பது வயது மாதுக்கு பிரசவம் பார்த்தபோது தவறு தலாக சிசுவின் தலையைத் துண்டித்துவிட்டார். இதனால் மருத்துவர் தகுதி யை இழக்க வேண்டிய ஆபத்தை அந்த மருத்துவர் எதிர்நோக்கு கிறார். 2014 மார்ச் 16ஆம் தேதி யன்று டண்டியில் உள்ள நைன்வெல்ஸ் மருத்துவமனை யில் டாக்டர் வைஷ்ணவி லக்ஸ் மன், வயது 41, மற்ற மருத்துவர் களுடன் சேர்ந்து ஒரு பெண் ணுக்குப் பிரசவம் பார்த்தார். அப்போது சிசுவின் தலை மேல்நோக்கி இருந்ததால் தாய்க்கு உடனடியாக சிசேரியன் செய்ய வேண்டும் என்று மற்ற மருத்துவர்கள் வைஷ்ணவியிடம் அறிவுறுத்தினர்.
ஆனால் இதனை புறக் கணித்த டாக்டர் வைஷ்ணவி இயற்கை பிரசவ முறையை மேற் கொண்டார். இதில் 'டிராக்ஷன்' முறையில் சிசுவை வெளியே எடுக்க அவர் முயற்சி செய்தார். அப்போது குழந்தையின் கால்கள் இழுக்கப்பட்டதில் தலை துண்டிக்கப்பட்டு கை, கால்களுடன் உடல் மட்டும் வெளியே வந்தது என்று 'கார் டியன்' நாளேடு வெளியிட்ட செய்தி தெரிவித்தது. ஒரு நாள் தேசிய முன்னணி ஆட்சி கவிழும் ஆபத்து கோத்தா கினபாலு: சாபா மாநிலத் தில் தேசிய முன்னணியிலிருந்து ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறிவிட்டதால் அங்கு பதவியேற்ற மறுநாளே தேசிய முன்னணி அரசாங்கம் கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சென்ற வியாழக்கிழமை இரவு 11.15 மணியளவில் சாபா தேசிய முன்னணியின் தலைவர் மூசா அமான், மாநில முதல்வராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். ஆட்சி அமைக்க தமக்கு போதுமான பெரும்பான்மை இருப்ப தாகவும் அப்போது அவர் கூறி யிருந்தார். இந்த மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி மொத்தமுள்ள 60 இடங்களில் 29 இடங்களைக் கைப்பற்றியது. அதே சமயத்தில் வாரிசான் கட்சியும் அதன் ஆதரவு கூட்டணியான பக்கத்தான் ஹரப் பானும் 29 இடங்களில் வெற்றி பெற்றது. இதர இரண்டு இடங்களை ஸ்டார் கட்சி கைப்பற்றியது.