கோலாலம்பூர்: பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள டாக்டர் மகாதீர் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பானில் திடீர் பிரச்சினை எழுந்துள்ளது. அமைச்சர் பொறுப்பு ஒதுக்கப் பட்டதில் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் பிரதமர் மகாதீரும் அன்வார் இப்ராஹிமும் தலையிட்டு பிரச்சினைக்குத் தற் காலிகமாக முற்றுப்புள்ளி வைத் துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் நான்கு கட்சி கூட்டணி பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தேசிய முன்னணியை தூக்கி எறிந்தது. இதையடுத்து பிரதமர் மகாதீர் தலைமையில் பக்கத்தான் ஹரப் பான் ஆட்சியமைத்தது. அன்வார் இப்ராஹிமின் மனைவி வான் அஸிஸா இஸ்மாயில் துணைப் பிரதமரானார். மறுநாளே முக்கிய பொறுப்பு களை வகிக்கும் மூன்று முக்கிய அமைச்சர்களின் பெயர்களை டாக்டர் மகாதீர் வெளியிட்டார்.
சனிக்கிழமை அன்று அன்வார் இப்ராஹிம் சிகிச்சை பெற்று வரும் செராஸ் மறுவாழ்வு மருத்துவமனையில் பிரதமர் மகாதீருடன் துணைப் பிரதமர் வான் அஸிஸா இஸ்மாயில், அன்வார் இப்ராஹிம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். படம்: அன்வார் இப்ராஹிம் ஃபேஸ்புக்