பாரிஸ்: பிரான்சில் கிறிஸ்மஸ் சந்தையில் கூடியிருந்த மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியவனை போலிசார் சுட்டுக் கொன்றதாக பிரெஞ்சு உள்துறை அமைச்சர் தெரி வித்துள்ளார். கிறிஸ்மஸ் சந்தையில் தாக்குதல் நடத்திய 29 வயது செரிஃப் செக்காட் என்ற இளைஞனை ஸ்ட்ராஸ்பர்க் பகுதியில் பார்த்த மூன்று போலிஸ் அதிகாரிகள் அவனை தடுத்து நிறுத்த முயன்றபோது அவன் போலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் அதன் பின்னர் போலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவன் கொல்லப்பட்டதாகவும் உள்துறை அமைச்சர் காஸ்டனர் கூறினார். ஸ்ட்ராஸ்பர்க் சந்தையில் கடந்த செவ்வாய்க்கிழமை அந்த இளைஞன் துப்பாக்கி யால் சுட்டதில் மூவர் உயிர் இழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட அவன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலிசார் கூறினர். அவன் தப்பிச்சென்ற போது கையில் ஒரு துப்பாக்கியும் ஒரு கத்தியும் வைத்திருந்ததாகக் கூறப்பட்டது. அவனை தீவிர மாகத் தேடி வந்த போலிசார் பின்னர் அவனை சுட்டுக் கொன்றதாக அமைச்சர் கூறி னார். செக்காட் ஏற்கெனவே பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர் லாந்து ஆகிய நாடுகளில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டதற் காக பல தடவை தண்டனை பெற்றவன் என்பது தெரிய வந்துள்ளது என்று உள்துறை அமைச்சர் காஸ்டனர் கூறினார். துப்பாக்கிச்சூட்டு சம் பவத்தில் கொல்லப்பட்ட மூவரில் ஒருவர் ஆப்கானிஸ் தானைச் சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் பிரான்சைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் என்றும் மூன்றாவது நபர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி என்றும் போலிசார் கூறினர். பிரான்சில் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிக்க பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.