மலேசிய மாமன்னர் இன்று தேர்வு

கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய மாமன்னர் இன்று தேர்ந்து எடுக்கப்படவுள்ளார். அதற்காக இஸ்தானா நெகாராவில் இன்று காலை 10.30 மணியளவில் நடை பெறும் சிறப்புக் கூட்டத்தில் ஒன்பது மன்னர்களும் பங்கேற்கின்றனர்.
அந்நாட்டின் 15வது மாமன்ன ராக 2016 டிசம்பரில் பதவியேற்ற கிளந்தான் சுல்தான் ஐந்தாம் முகம்மது, தமது பதவிக்காலத்தில் ஈராண்டுகள் மட்டுமே நிறைவு பெற்ற நிலையில் கடந்த மாதம் 6ஆம் தேதி பதவியைத் துறந்தார். இதையடுத்து, துணை மாமன்ன ரான பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா இடைக்கால மாமன்னராக இருந்து வருகிறார்.
சுழற்சி வரிசையில் மலேசிய மாமன்னர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பெர்லிஸ், திரெங்கானு, கெடா, கிளந்தான், பாகாங், ஜோகூர், பேராக் என்ற வரிசையில் மாமன்னர் தேர்ந்தெடுக்கப்படுவ தால் அப்பதவி அடுத்ததாக பாகாங் சுல்தானுக்குச் செல்ல வேண்டும்.
தம்முடைய தந்தையார் உடல் நலம் குன்றியிருந்த நிலையில் இடைக்காலமாக பாகாங் மன்ன ராக இருந்து அவரது பணிகளைக் கவனித்து வந்த தெங்கு அப்துல்லா, அண்மையில் அதிகார பூர்வமாக பாகாங் மன்னராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!