ஒட்டிப்பிறந்த இரட்டையருக்கு உயிர்காப்பு சிகிச்சை பெறுவதில் பிரச்சினை

ஏமனில் உயிருக்குப் போராடும் ஒட்டிப்பிறந்த இரட்டையருக்கு அவசரமாக சிகிச்சை தேவைப்படுகிறது. ஆயினும் அந்நாட்டில் நிலவி வரும் பூசலால் அந்நாட்டின் தலைநகர் சனாவிலுள்ள அனைத்துலக விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் அந்த இரட்டையர்கள் நாட்டைவிட்டு வெளியேற முடியாது. வன்முறையால் உருக்குலைந்திருக்கும் ஏமனில் இந்தக் குழந்தைகளுக்குப் போதிய சுகாதார ஆதரவு இல்லை.

"இந்தக் குழந்தைகள் உடனே நாட்டைவிட்டு வெளியேறி சிகிச்சை பெறவேண்டும். ஏமனில் நிலவும் குழப்பமான சூழலில் இக்குழந்தைகள் உயிர் பிழைக்க முடியாது," என்று அந்நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஃபைசல் அல் பல்பாய், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

சுவாசக் கருவியின் உதவியுடன் அந்தக் குழந்தைகளால் மூச்சுவிட முடிகிறது. இரட்டையரின் தலை, முதுகு தண்டு, நுரையீரல், இதயம், வயிறு, குடல் ஆகியவை வெவ்வேறாக இருக்கின்றன. ஆயினும், அந்தக் குழந்தைகளுக்கு ஒரே கல்லீரல், ஆணுறுப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இரட்டையரை வெளிநாட்டுக்கு அனுப்ப மருத்துவர்கள் ஐக்கிய நாட்டு அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!