சீனாவின் தேசிய சின்னமானது -பாண்டா கரடி. அவ்விலங்கின் அடைப்புப் பகுதியில் ஒரு பெண் விழும் காணொளி பரவலாக சமூக ஊங்கங்களில் பகிரப்பட்டு வருகிறது. சிசுவான் மாநிலத்தில் அமைந்துள்ள செங்டு பகுதியில் இருக்கும் பெரிய பாண்டா இனப் பெருக்கத்தின் ஆராய்ச்சி நிலையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
சிவப்பு ஆடை அணிந்த அந்தப் பெண், அடைப்புக்குள் விழுந்தபின் பாண்டா கரடிகள் அந்தப் பெண்ணை நோக்கி வருவது அந்தக் காணொளியில் தெரிகிறது.
ஒரு மூங்கில் கிளையைக் கொண்டு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்தப் பெண்ணை மீட்க முயற்சி செய்திருந்தார். ஆனால் அது வெற்றி பெறவில்லை.
பிறகு அவர் தன் கையை வைத்து அந்தப் பெண்ணை எட்டிப் பிடித்து வெளியே இழுத்தார்.
சில சுற்றூலாப் பயணிகளும் பார்வையாளர்களும் அதிர்ச்சியில் கதறினர் என்றும் அந்தப் பெண்ணுக்கோ பாண்டா கரடிக்கோ காயம் எதும் ஏற்படவில்லை என்றும் சீன ஊடகமான 'சினா' தெரிவித்தது.