சீனாவின் ஷாங்காய் நகரில் கட்டடம் ஒன்று தரைமட்டமானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அந்தக் கட்டடத்திலிருந்து இதுவரை சுமார் 14 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் காலை 11.30 மணிக்கு நேர்ந்ததாக சீனாவின் பேரிடர் நிர்வாக அமைச்சு தெரிவித்தது.
கட்டட இடிபாடுகளைக் காட்டும் படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் தீயெனப் பரவி வருகின்றன.