தென் அமெரிக்காவிலுள்ள ஐந்து நாடுகளில் நேற்று மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து அர்ஜெண்டினா விழிப்பு நிலையில் உள்ளது.
எதிர்பார்க்கப்படாத மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதையடுத்து அது இணையத் தாக்குதலாகவும் இருக்கலாம் என்றும் அந்த சாத்தியத்தை மறுக்கப்போவதில்லை என்றும் அந்நாட்டு அதிபர் மவ்ரிகோ மக்ரி கூறியுள்ளார்.
மின்சார கட்டமைப்பில் என்ன பழுதானது என்பதற்குத் தக்க காரணம் இல்லை என்ற நிலையில் அர்ஜெண்டினா சம்பவத்தை விசாரித்துவருகிறது.
அர்ஜெண்டினா, உருகுவே, பிரேசில், சிலி, பாராகுவே ஆகிய நாடுகளில் நேற்று மின்தடை ஏற்பட்டது.
இணையத் தாக்குதல் முக்கிய காரணமாக இருக்காது என்றாலும் அதற்கு சாத்தியம் இல்லை என்று தள்ளுபடி செய்யமுடியாது என்றார் அர்கெண்டினாவின் எரிசக்தி துறை செயலாளர் கஸ்டாவொ லொபிபேகுவெ செய்தியாளர்களுடம் குறிப்பிட்டார்.
சாதாரண இணைப்புப் பிரச்சினை இந்தத் தடைக்குக் காரணமாக இருந்தாலும் இருக்கலாம் என்றார் அவர்.
அர்ஜெண்டினாவின் உள்நாட்டுத் தேர்தலுக்காக மக்கள் வாக்களிக்க செல்லும் நேரத்தில் இந்த மின்தடை ஏற்பட்டது. அதனால் வாக்களிப்பு தாமதமானது.
பாராகுவே, சிலியின் பல இடங்களும் பெரும் பாதிப்புக்கு ஆளானது.