இம்ரான் கான்: பாகிஸ்தானில் 40 தீவிரவாத குழுக்கள் செயல்பட்டன

பாகிஸ்தானில் 40 தீவிரவாத அமைப்புகள் இயங்கி வந்ததாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். பாகிஸ்தானை ஆட்சி செய்த முந்தைய அரசாங்கங்கள், அந்நாட்டில் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் தொடர்பான உண்மையைக் கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்காவிடம் மறைத்துவிட்டதாக அவர் சொன்னார்.

அமெரிக்காவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள திரு இம்ரான் கான், தலைநகர் வாஷிங்டனில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசியபோது இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

தீவிரவாத அமைப்புகளை வேரோடு ஒழிக்க வேண்டும் என பாகிஸ்தானிடம் அமெரிக்கா முன்னதாக வலியுறுத்தி வந்தபோது, தன்னைத் தற்காத்துக்கொள்ளும் போராட்டத்தில் தமது நாடு இருந்ததாக அவர் கூறினார்.

தீவிரவாத அமைப்புகள் அப்போது ஆதிக்கம் செலுத்தி வந்த வேளையில், தம்மைப் போன்றவர்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்ந்ததை நினைவுகூர்ந்த அவர், உண்மையில் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவே சிரமமாக இருந்த காலகட்டம் அது என்று சொன்னார்.

(முழுச் செய்தி, நாளைய அச்சுப் பிரதியில்.…)

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!