மணிலாவின் தென் பகுதி மாகாணமான பட்டாங்காசில் உள்ள சின்னஞ்சிறிய டால் எரிமலை நேற்று குமுறலுடன் சாம்பலை கக்கியதைத் தொடர்ந்து அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான குடியிருப்பாளர்கள் அடைக்கலம் நாடி வேறிடங்களுக்கு ஓடினர்.
வானில் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் உயரத்துக்கு நீராவியும் அதனைத் தொடர்ந்து சாம்பலும் சிதறின. சாதாரணமாக இருக்கும்போது சுற்றுப்பயணிகளைக் கவரும் விதத்தில் அந்த எரிமலை இருக்கும். அதனால் நேற்றும் ஏராளமான சுற்றுப்பயணிகள் படமெடுக்க கூடியிருந்த வேளையில் எரிமலை சீறியது. அவர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
எரிமலை வெடித்த சமயத்தில் உருவான புகை மீது மின்னல் தாக்கியதில் கரும்புகைக்கு நடுவே நிகழ்ந்த வர்ணஜாலத்தைக் காட்டியது இந்தக் காணொளி (ஜோஷுவா போபாடில்லா).